ஹரியானா மாநிலம்,பரிதாபாத்தில் அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் 2600 படுக்கை வசதி கொண்ட அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய இந்த நவீன பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் அமிர்தானந்தமயி, ஹரியானா மாநில கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால், அமைச்சர் கிருஷ்ணன் பால், துணை முதல்வர் துஷ்யந்த் சவுட்டாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.