தனி நபர்கள் வாங்கும் கடனுக்கு 1 வருட உத்தரவாதம்.! - மத்திய அரசு

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சமூகத்துறை முன்முயற்சிகள் கீழ் 2014-15 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் “பட்டியல் இனத்தவருக்கான கடன் மேம்பாட்டு உத்தரவாதத் திட்டம்” அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் ரூ.200 கோடி ஆரம்பகட்ட நிதியுடன் தொடங்கப்பட்டது.

பட்டியலின வகுப்பினருக்கான தொழில் முனைவோருக்கு நிதியுதவி அளிக்கும் கடன் வழங்கும் வங்கிகளின் (எம்.எல்.ஐ) நிறுவனங்களுக்கு கடன் மேம்பாட்டு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோரை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஐஎப்சிஐ நிறுவனம், பட்டியலினத் தொழில் முனைவோருக்கு நிதியுதவி அளிக்க ஊக்குவிக்கப்படும் எம்.எல்.ஐ.க்களுக்கு உத்தரவாதம் வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்தும் ஒருங்கிணைப்பு முகமையாக உள்ளது. 

இத்திட்டத்தின் கீழ், தனிநபர்கள், தனி உரிமையாளர் நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சங்கங்களுக்கு எம்எல்ஐ-கள் மூலம் காலவரம்புக் கடன், கூட்டு காலவரம்புக் கடன், செயல்பாட்டு மூலதன வசதியையும் இந்தத் திட்டத்தில் பெறலாம்.

உத்தரவாத காலம்

அதிகபட்சம் 7 ஆண்டுகள் அல்லது திருப்பிச் செலுத்தும் காலம் எது முந்தையதோ அது. இருப்பினும், ஆரம்பத்தில் கடனுக்கு 1 வருடத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படும். வருடாந்திர இடைவெளியில் புதுப்பிக்கப்படும்.