20000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள்...

20000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள்...

பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் பயிற்சி முகாமில் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., சிறப்புரையாற்றினார். உடன் சுங்கம் மற்றும் சேவை வரி கூடுதல் ஆணையர் திருமதி.கோ.கோமதி I.R.S., (இந்திய வருவாய் பணி), துணை கணக்கு அலுவலர், இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை பா.கலைச்செல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இணை இயக்குநர் பழனிக்குமார், தமிழ் இணையக் கல்விக்கழக இணை இயக்குநர் ரெ.கோமகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதிவாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்கள் மத்திய அரசின் தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத்துறை, ரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும், ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) மத்திய அரசின் வருவாய்த் துறைகளான Central Board Of Direct Taxes, Central Board Of In Direct Taxes & Customs, Directorate Of Enforcement, Central Bureau Of Narcotics ஆகியவற்றிலும் மற்றும் உதவியாளர், கண்காணிப்பாளர் (Assistant Superintendent) பணியிடங்கள் மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் C பிரிவு பணிகள் 12-ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் (Combined Higher Secondary Level (CHSL) தேர்வு மூலம் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு (Lower Division Clerks) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் இப்பொதுப் பணிகள் தவிர Junior Engineer தேர்வு, Stenographer தேர்வு, Sub Inspector in Delhi Police, Central Armed Police Force (CAPF) and Central Industrial Security Force (CIF) தேர்வுகளும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

மேற்கண்ட தேர்வுகளுக்கு நிலை 1-ல் பொதுவான போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehensive பிரிவுகளில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்படுகிறது, நிலை 2-ல் Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge மற்றும் General Studies பாடப்பிரிவுகளில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படுகிறது. இப்பாடப் பிரிவுகள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

எனவே தமிழ்நாடு மாணவர்கள் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பெருமளவு பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகிய துறைகள் இணைந்து இத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவமிக்க வல்லுநர்களை கொண்டு ஒரு நாள் கருத்தரங்கை நேற்று சென்னை, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடத்தியது. இப்பயிற்சி கருத்தரங்கிற்கு நேரில் வர இயலாத மாணவர்கள் பயனடையும் வகையில் இந்நிகழ்ச்சி முழுவதுமாக https:youtu.be/ZTNqcXYp6QU என்ற இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளது.