மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி அறிவிப்பு…

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ – மாணவிகள் 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ – மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ – மாணவியரில் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-2023ஆம் கல்வியாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.i/welfschemes.htm#scholarship scheme என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் மேற்படி 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு 31.01.2023 க்குள் அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புகட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைபேசி எண் : 044 – 2951 5942, மின்னஞ்சல் முகவரி, tngovtitscholarship@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.