ஆசியாவிலேயே மிக நீளமான ஈரடுக்கு பாலம்

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நாகபுரி மெட்ரோ…

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாகபுரி மெட்ரோவின் 3.14 கி.மீ. தொலைவிலான ஈரடுக்கு பாலம், ஆசியாவிலேயே மிக நீளமான ஈரடுக்கு பாலம் என்பதற்காகவும், ஈரடுக்கு பாலத்தில் அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்டிருப்பதற்காகவும் இந்திய மற்றும் ஆசிய சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.

மெட்ரோ ரயிலுக்கான இரண்டு தடங்களோடு மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களை, நாகபுரியின் வாா்தா சாலையில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் மேல் பகுதி கொண்டுள்ளது. அதற்குகீழே, வாகன போக்குவரத்துக்கான மேம்பாலமும் உள்ளது. தரைப்பகுதியில் உள்ள சாலையில் வாகனங்கள் வழக்கம்போல் செல்லும் வசதி என மூன்று நிலையிலான போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது.

இப்பாலம்தான் உலகிலேயே மிக நீளமான ஈரடுக்கு பாலம் என்பதால், இப்பாலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை, நேற்று நாகபுரியில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மெட்ரோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் பிரிஜேஷ் தீட்சித்திடம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் நடுவா் ரிஷி நாத் வழங்கினாா்.