வீட்டு வைத்திய முறையால் சர்க்கரை நோயாளிகளுக்கு சரியானத் தீர்வு!

-> சர்க்கரை கட்டுப்பட பாகற்காய் அடிக்கடி உணவுடன் சேர்த்துக்கொள்ளவும் மற்றும் சிறுகுறிஞ்சான் இலையை பொடியாக அரைத்து சாப்பிட்டாலும் கட்டுப்படும்.

-> சர்க்கரை வியாதிக்காரர்கள் மஞ்சளையும் நெல்லிகாயை பவுடராக அரைத்து பாலில் கலந்து பருகி வர மிகுந்த பலன் அளிக்கும்.

-> நாவல்பழம் மற்றும் அவரைபிஞ்சு இவைகளை அடிக்கடி உணவுடன் சேர்த்துக்கொள்வது மிகநன்மை தரும்.

-> அத்திப்பாலில் வெண்ணெய்யை கலந்து சாப்பிட வேண்டும்.

-> தினமும் 5 அல்லது 6 ஆவாரம்பூவை நங்கு மென்று சாப்பிட வேண்டும்.

-> கோவைப்பழம் தினமும் 1 அல்லது 2 சாப்பிட்டுவர சக்கரை நோய் கட்டுப்பட தொடங்கும்.

-> கொன்றைப்பூவை அரைத்து மோரில் கலந்து சாப்பிட்ட வரவும்.

-> சர்க்கரை நோயால் எற்படும் எரிச்சல் குணமாக மாவிளங்க இலையை அரைத்து உள்ளங்கால் மற்றும் கைகளில் பற்றுப் போட எரிச்சல் குணமாகும்.

-> சிறுநீர் சர்க்கரைக்கு வாரம் ஒரு நாள் பாகற்காய் இலையின் சாரை 50 மில்லி சாப்பிட்டு வர குறையும்.

-> உப்பு சத்து சரியாக கரிசலாங்கண்ணிபொடி, வேப்பிலைப்பொடி, துளசிப் பொடி, கீழாநெல்லிப்பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து காலை ஒரு ஸ்பூன், மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட வேண்டும்.