ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணிக்கான வேலைவாய்ப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறையில் செயல்படும் அரசு மருத்துவக்கல்லூரி, அரசுமருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம் ஆகியவற்றில் செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி : செவிலியர்

மொத்த பணியிடங்கள் : 68

கல்வித் தகுதி : செவிலியர் பட்டயபடிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பி.எஸ்.சி. நர்ஸிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர்ம் மற்றும் தாதியம் குழுமத்தின் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் (Integrated curriculum registered under TN nursing council) கீழ் உள்ள படிப்பு படித்திருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.

வயது : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 50 வயதிற்குள் இருக்க வேண்டும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை 37 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பிக்கும் முறை : இணையத்தளத்தில் இதன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்த பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள இடங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 31.02.2023 மாலை 5 மணி வரை

முகவரி : The Executive Secretary / Deputy Director of Health Services, District Health Society, O/o the Deputy Director of Health Services, Villupuram District – 605 602.

மேலும் அறிய : https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2023/01/2023011827.pdf என்ற இணையதளத்தில் அறியலாம்.