பிரான்ஸ் தலைநகர் பாரீசில், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுவருகிறது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலகின் பல நாடுகளில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 (பதக்க சுற்று) போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும், இந்திய வீரர் பிரணவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதுவரை, 2024 பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப்பட்டியலில் 21 பதக்கங்களை ஜப்பான் வென்றிருந்த நிலையில், அதை பின்னுக்குத் தள்ளி, இந்தியா 13 -வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.