உதவி பேராசிரியராக வேண்டுமா..? உங்களுக்கான வேலை வாய்ப்பு...

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுபற்றியான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் 4,136 காலியாக உள்ளன. இந்த உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், backing vaccancies 142, shortfall vaccancies 9, current vaccancies 3,982, சென்னை பிரசிடென்சி கல்லூரி 3 என மொத்தம் 4,136 பேராசிரியர் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஊதியம் ரூ.57,000 முதல் 1,82,000 வரை இருக்கும்.

இந்த பணியிடங்களுக்கு ஏப்ரல் 15 முதல் மே 14 வரை விண்ணப்பிக்க அவகாசம் எனவும் தேர்வு தேதி பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு கல்வி தகுதி உரிய பாடங்களில் முதுநிலை படிப்பு அல்லது NET, SLT, JRF உள்ளிட்டவற்றில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்புடன் பிஎச்டி முடித்திருக்க வேண்டும். இந்த பணியிடங்கள் குறித்தான கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

https://drive.google.com/file/d/1N-CSdlYiJG9WxX_ssU-EHPDH72nLtTe2/view