அஞ்சல் துறையில் உள்ள அரசு வேலை உங்களுக்குதான்…! உடனே நேர்காணலில் கலந்துக்கோங்க…

அஞ்சல் முகவர் மற்றும் கள அலுவலர் தேர்விற்கான நேர்காணல் ஜூலை 7 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், அதற்கான முக்கிய அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர் தேர்விற்கான நேர்காணல் ஜூலை 7 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இந்த பணியிடத்தில் தேர்வாகும் தேர்வாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது எனவும், பாலிசியின் பிரிமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள இருப்பவர்கள் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இரண்டு பாஸ்போர்ட் புகைப்படம் எடுத்து வர வேண்டும் எனவும், கட்டாயமாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 50 வயதிற்குள்ளாகவும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆயுள் காப்பீடத்தின் முன்னாள் முகவர்கள், அங்காடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி தேர்வில் தேர்ச்சி பெற்ற நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்களுக்கு மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் பணியிடம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.