குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவில் பணிபுரியும் விஞ்ஞானிகளின் விடா முயற்சியால் ராக்கெட் ஏவும் தொழில் நுட்பத்தில் இந்தியா சர்வதேச அளவில் முன்னோடியாகத் திகழ்கிறது. இஸ்ரோவின் வளர்ச்சி வேகமாக இருப்பதால், ஏற்கனவே ஸ்ரீஹரி கோட்டாவில் இருக்கும் 2 ராக்கெட் ஏவுதளத்தோடு சேர்த்து மூன்றாவது ஏவுதளம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதன் படி, அதிகாரிகளின் பல்வேறு கட்ட சோதனைக்குப் பிறகு தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. குலசேகரன்பட்டினம் பகுதியில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.
அமலாபுரம், எள்ளுவிளை, கூடல் நகர், அழகப்பபுரம், உள்ளிட்ட பல கிராமங்களில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தன. மேலும், இப்பகுதியில் 2000 பரப்பளவில் விண்வெளி பூங்காவை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது குலசேகரப்பட்டினம், . இந்த சூழலில் வளிமண்டல பகுதிகளில் ஆய்வு செய்ய ரோஹினி என்ற ‘RH-200’ வகை ராக்கெட்டை இஸ்ரோ அங்கிருந்து ஏவுகிறது. இதனால், 18 கி.மீ சுற்றளவில் கடலுக்குள் படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.