வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
பன்னீர் க்யூப்ஸ் – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
ஓமம் – அரை தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – அரை டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி – சிறிது
கடலை மாவு – 1 கப்
எண்ணெய் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வேகவைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து, பிசைந்து கொள்ளவும். அதன் பிறகு பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சியை பேஸ்ட் சேர்க்கவும். பிறகு பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அதன் பிறகு ஒரு பெரிய கிண்ணத்தில் கடலை மாவு சேர்த்து, அதனுடன் சிவப்பு மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
இப்போது பெசன் மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து, போண்டாவிற்கு பயன்படுத்தப்படும் கலவையைப் போன்ற கெட்டியான கலவையை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.எண்ணெய் சூடானதும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதன் பிறகு, அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலக்கவும். சிறிது நேரம் கழித்து நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.
இப்போது உருளைக்கிழங்கு உள்ளே பன்னீரை சிறிய உருண்டைகளை உருவாக்கவும். உருண்டைகள் தயாரானதும், கடாயில் எண்ணெயைச் சூடான பிறகு அதை போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
உருண்டைகளை எல்லா பக்கங்களிலும் பொன்னிறமாக வறுக்கவும். அவ்வளவு தான் குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு பன்னீர் ஷாட்ஸ் ரெடி.